மேற்குவங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் சந்தேஷ்காலி கிராமத்தில் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான திரி ணாமுல் காங்கிரஸ் தலைவர் ஷேக் ஷாஜ ஹான், அவரது நெருங்கிய உதவியாளர் சிவபிரசாத் ஹஸ்ரா மற்றும் உத்தம் சர்தார் ஆகியோரைக் கைது செய்யக் கோரி கடந்த வியாழனன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் பெண் கள் போராட்டம் நடத்தினர்.
அமலாக்கத்துறை விசாரணைக்கு பயந்து தலைமறைவாக உள்ள திரிணா முல் காங்கிரஸ் தலைவர் ஷேக் ஷாஜ ஹான் மற்றும் அவரது கூட்டாளிகளை கைது செய்யக் கோரி அகிம்சை வழி யில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் போலீசாரும், ஆளும் திரிணாமுல் காங்கி ரஸ் குண்டர்களும் வன்முறையை கட்ட விழ்த்துவிட்டனர். மேலும் பாலியல் குற் றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வர்கள் என்பதால் அவர்களை கைது செய்யாமல், நீதி கோரி போராட்டத்தில் ஈடு பட்ட பெண்கள், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏவும், விவசாய தொழிலாளர்களின் சங்கத்தின் மாநிலச் செயலாளருமான நிரபதா சர்தார் உள்ளிட்ட சிபிஐ(எம்) ஊழியர்களை கைது செய்து, சந்தேஷ்காலியில் அறி விக்கப்படாத ஊரடங்குடன் 144 தடை உத்தரவை பிறப்பித்தது மம்தாவின் காவல்துறை.
திரிணாமுல் காங்கிரஸ் அரசின் இந்த அராஜக செயல்பாட்டிற்கு சிபிஐ(எம்) மத்தியக்குழு கடும் கண்டனம் தெரிவித் தது. இந்நிலையில், கடந்த ஒரு வார மாக சந்தேஷ்காலி மக்களை 144 தடை உத்தரவால் வீட்டிற்குள்ளே அடைத்து வைத்து இருக்கும் சம்பவத்தை எதிர்த்து கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு செவ்வாயன்று விசா ரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் சந்தேஷ்காலி யில் மக்கள் போராட்டத்தால் என்ன அசம்பாவிதம் நிகழ்ந்தது? என்ன கார ணத்திற்காக 144 தடை விதிக்கப்பட்டது? என ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அர சிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினர். அத்துடன் 144 தடை உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.